தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துவரும் நிலையில், இன்று 4538 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 56 பேர் அரசு மருத்துவமனையிலும், பிறர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு நாட்களாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்று 3391 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னையில் இன்று 1243 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.