முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

Tamilnadu Corona |

  • News18
  • 19

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், கோவையில் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 29

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    சென்னையை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும், நாள்தோறும் சென்னையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில், ஞாயிறு அன்று அது குறைந்து 12 மரணங்கள் பதிவாகின.

    MORE
    GALLERIES

  • 39

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    2-வது முறையாக தமிழகத்தில் 119 என்ற உச்சபட்ச மரண எண்ணிக்கையும் பதிவானது. பிற மாவட்டங்களில் ஒற்றை இலக்க மரணங்களே பதிவான நிலையில், கோவை, விருதுநகரில் தலா 13 மரணங்கள் பதிவாகி அதிர்ச்சியளித்தது.

    MORE
    GALLERIES

  • 49

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    ஆகஸ்ட் 9 வரையிலான 9 நாட்களில் பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது மதுரை, விருதுநகர் மற்றும் கோவையில் தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 59

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    கோவையில் கடந்த 10 நாட்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 9 நாட்களில் மட்டும் சென்னைக்கு அடுத்து கோவையில் அதிக உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக உள்ள மதுரையில், 9 நாட்களில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 69

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகரிக்கும் நிலையில், தீவிர நோய்கள் உள்ளோர் கொரோனா அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனைகளை நாடும் தொற்றாளர்கள், ஆபத்தான கட்டத்தை எட்டும்போது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    இந்நிலையில், நாடு முழுவதும் 4 மாநிலங்களில் உள்ள 16 மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநிலங்களின் சராசரியை விட உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    இந்திய அளவில் இந்த மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மட்டுமே 17 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் அந்த பட்டியலில் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 99

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

    நாள்தோறும் அதிக புதிய பாதிப்புகள், குறைவான பரிசோதனைகள், அதிகபட்ச பாதிப்பு உறுதியாகும் விகிதம் போன்ற காரணிகளால் இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES