தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 80,401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 53,66,224 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 4,80,524 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 6,516 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 4,23,231 பேருக்கு கொரோனா குணமடைந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 78 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 8,090 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 993 பேருக்கும், கோயம்புத்தூரில் 445 பேருக்கும், கடலூரில் 344 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.