தலைநகர் சென்னையில் ஐந்தில் ஒரு பகுதியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு சார்பில் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள சுமார் 12,405 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 21.5 சதவிகிதம் பேர் ஏற்கெனவே கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 80 சதவிகிதம் பேருக்கும் கொரோனா வருவதற்காக சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் ஆவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் குறைந்தபட்சமாக மாதவரத்தில் 7.1% பேருக்கும், அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 44.2% பேருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.