முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

மாணவன் பிரசன்னன் கூறுகையில், கொரானா விழிப்புணர்வுக்காக பாடல் பாடியுள்ளேன், ஓவியம் வரைந்துள்ளேன். ஓவியம் மூலம் கிடைத்த பணத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரணநிதிக்கு வழங்க உள்ளேன் என தெரிவித்தார்.

  • 16

    தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

    கொடைக்கானல் பள்ளி மாணவன் தான் வரைந்த ஓவியத்தை ரூ.25 ஆயிரத்திற்கு விற்று கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

    MORE
    GALLERIES

  • 26

    தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மாணவன் அஜ‌ய்பிரசன்னன். இவர், இங்குள்ள த‌னியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை  பாடி வெளியிட்டது வைரலானது.

    MORE
    GALLERIES

  • 36

    தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

    இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டு ஓவியம் ஒன்று வரைந்தார். இதில் விற்று கிடைக்கும் பணத்தினை கொரோனா நிவாரணநிதிக்கு வழங்க முடிவு செய்தார்.

    MORE
    GALLERIES

  • 46

    தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

    இவர் வரைந்த புகைவண்டி ரயில் செல்வதற்கு அருகே குதிரையில் அமர்ந்து ஒரு நபர் செல்வது போன்ற ஓவியத்துட‌ன் செஞ்சிலுவை சின்ன‌ம் இருந்ததால் செஞ்சிலுவை சங்கத்தினர் உதவியுடன் விற்பனை செய்தார். இந்த ஓவியத்தை கொடைக்கானல் முன்னாள் நகராட்சித் தலைவரும், சியோன் பள்ளி தாளாள‌ர் குரியன் ஆபிரகாம் ரூ.25 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினார்.

    MORE
    GALLERIES

  • 56

    தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

    குரியன் ஆபிரகாம் கூறுகையில், மாணவன் பிரசன்னன் தனது 13 வயதிலேயே கின்னஸ் சாதனை படைத்து கொடைக்கானலுக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பேச்சு, ஓவியம், இசை என அனைத்திலும் திறமை பெற்றவராக உள்ளார்.இவர், ஏற்கனவே கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தவர். தற்போது ஓவியம் வரைந்துள்ளார். கொரோனா நிதிதிரட்ட இந்த ஓவியத்தை அவர் விற்கவேண்டும் என செஞ்சிலுவை சங்கத்தினர் உதவியுடன் வந்து கேட்டபோது, இந்த ஓவியத்தை ரூ.25 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளோம், என்றார்.

    MORE
    GALLERIES

  • 66

    தான் வரைந்த ஓவியத்தை ₹ 25 ஆயிரத்திற்க்கு விற்று கொரோனா நிதி வழங்கிய மாணவன்!

    மாணவன் பிரசன்னன் கூறுகையில், கொரானா விழிப்புணர்வுக்காக பாடல் பாடியுள்ளேன், ஓவியம் வரைந்துள்ளேன். ஓவியம் மூலம் கிடைத்த பணத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரணநிதிக்கு வழங்க உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES