முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  • 16

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

    கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேசமயம், மெரினா கடற்கரை உட்பட சுற்றுலா தலங்களுக்கு அனுமதி உள்ளிட்ட தளவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 26

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

    நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும்,  14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    MORE
    GALLERIES

  • 36

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

    நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும்,அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

    நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

    வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 66

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - தளர்வுகள் அறிவிப்பு : அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்

    தமிழ்நாடு முழுவதும்  பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.  மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

    MORE
    GALLERIES