இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரானா தொற்றால் உயிரிழந்தார். இவருக்கு வயது 103. இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவரான பத்மாவதி தேசிய இதயவியல் மருத்துவமனையை 1981-ல் தொடங்கி நடத்தினார். இதயவியல் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய இவர், பத்மபூசன், பத்ம விபூசன் விருதுகளை பெற்றவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11 நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள தேசிய இதயவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் பத்மாவதி, 2 நுரையீரல்களிலும் கடும் தொற்று ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.