முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

Nirmala Sitharaman Announcements | "முத்ரா சிசு திட்டத்தில் கடனை முறையாக செலுத்திவரும் சிறு தொழில்முனைவோருக்கு 12 மாதங்களுக்கு 2சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்"

  • 111

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    தெருவோர வியாபரிகளுக்கு 5ஆயிரம் கோடி மதிப்பில் கடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவு பொருட்கள், கிஷான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி மதிப்பில் கடன் என 9 புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 211

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    மத்திய அரசு ஒதுக்கிய 20 லட்சம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மேலும் 9 அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

    MORE
    GALLERIES

  • 311

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    அதன்படி, கிஷான் கிரெடிட் கார்டு மூலம் இரண்டரை கோடி விவசாயிகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என தெரிவித்தார். நபார்டு மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதலாக 30ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும், இதன் மூலம் 3 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க முடியும் என அவர் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 411

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    3 கோடி விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கான வட்டி மானியம் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 511

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு 3ஆயிரத்து 500 கோடி செலவில் இலவசமாக 5 கிலோ தானியங்கள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 611

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட 23 மாநிலங்களில் 67 கோடி பேர் ஒரு நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பர் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 711

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு வீட்டுவசதி வழங்கும் வகையில், மிகக் குறைவான வாடகை கொண்ட குடியிருப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப்படும் எனவும் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 811

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    முத்ரா சிசு திட்டத்தில் கடனை முறையாக செலுத்திவரும் சிறு தொழில்முனைவோருக்கு 12 மாதங்களுக்கு 2சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என்றும், இதற்கு 1500 கோடி ரூபாய் செலவாகும் எனவும் அவர் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 911

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    தெருவோர வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு நடைமுறை மூலதனமாக பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவதற்கு, 5ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 1011

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    பழங்குடியினர் வேலைவாய்ப்புகளுக்கு 6ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். 

    MORE
    GALLERIES

  • 1111

    தெருவோர வியாபாரிகளுக்கு ₹ 10 ஆயிரம் கடன்... தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள்...! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?

    பிரதமரின் வீட்டுக்கடன் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படுவதன் மூலம் இரண்டரை லட்சம் நடுத்தர குடும்பங்கள் பயனடையும் என்றும், இதற்காக ஒதுக்கப்படும் 70ஆயிரம் கோடி ரூபாய் மூலம் வீட்டுவசதி துறை மேம்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    MORE
    GALLERIES