முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

மீன், மாடு உள்ளிட்ட பன்னைகளுக்கு பழங்கள் இலவசமாக வழங்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

  • 19

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் விவசாயத்தை மட்டும் நம்பி விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக நெல், மணிலா மற்றும் கரும்பு ஆகியவற்றை அதிகளவில் பயிர் செய்யப்பட்டு வந்தது. இந்த வகையான பயிர்களுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதால் தற்போது விவசாயிகள் பழ வகைகளை பயிர் செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 29

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமாக முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்த வகையான பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் போதுமானது.

    MORE
    GALLERIES

  • 39

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    குறிப்பாக விவசாய நிலத்தை சமன் செய்து 1 பாக்கெட் முலாம் பழம் மற்றும் தர்பூசணி விதை 1450 ரூபாய்க்கு வாங்கி 1 ஏக்கருக்கு சுமார் 15 பாக்கெட் முதல் 18 பாக்கெட் வரை விதைகளை நட்டு சொட்டு நீர் பாசனம் முலம் தண்ணீர் பாய்ச்சப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 49

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    விதை முளைத்த பின்னர் அதற்கு மேல் பிளாஸ்டிக் ரேப்பர் போடப்படுகின்றது. 1 ஏக்கருக்கு 25 பிளாஸ்டிக் பண்டல்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சொட்டு நீர் பாசனம் வெயிலின் வெப்பத்தால் ஆவியாகாமல் நிலத்திலேயே தங்கி விடுகின்றது

    MORE
    GALLERIES

  • 59

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    3 மாதங்களில் காய்கள் நன்றாக வளர்ந்து பழமாக மாறிவிடும். கடந்த 2 வருடங்களில் 1 கிலோ முலாம் பழம் மற்றும் தர்பூசணி பழங்கள் சுமார் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விவசாயிகளிடம் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 69

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    இதனால் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய் வரையில் வருமானம் கிடைத்து வந்தது. வியாபாரிகள் விவசாயிகளிடம் வாங்கிய பழங்களை ஆந்திரா, கர்நாடகா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.
    ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
    இந்த 144 தடை உத்தரவால் பழ விவசாயிகள் பழங்களை அறுவடை செய்து வாகனங்களில் ஏற்றி சந்தைகளில் சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் பயிர்களில் பழங்களை விட்டதால் தற்போது பழங்கள் அனைத்தும் வீணாகி அழுகி போய் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    இதனால் லட்சக்கணக்கில் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த பழங்களை இலவசமாக மீன் பண்ணை, மாட்டு பன்ணை, பன்றி பண்ணை, உள்ளிட்ட பண்ணைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது என்றும் விவசாயிகள் வேதனையாக கூறினர். பண்ணைகளில் இருந்து வருபவர்கள் ஓரு வேன் பழங்களுக்கு சுமார் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விவசாயிகளுக்கு அளித்து பழங்களை எடுத்து செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 99

    ஊரடங்கு: நிலத்திலேயே அழுகும் முலாம், தர்பூசணி பழங்கள்: வேதனையில் விவசாயிகள்..!

    கொரோனா வைரஸ் காரணத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தங்களது பழங்கள் அழுகி போய் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மன வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள் தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    MORE
    GALLERIES