இந்தியாவில் புதிதாக 32,695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 968,876ஐ எட்டியுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக 606 பேர் மரணமடைந்ததால் இறப்பு எணிக்கை 24,915ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக பாதிக்கப்பட்ட 7,975 பேர் உட்பட 2,67,000 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு கொரோனா உயிரிழப்பு 10,700ஐ கடந்தது. மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சட்டப்பேரவை வளாகம் 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 20,783 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், தொற்று பாதிப்பில் இருந்து மீள்வோர் விகிதம் 63.24 விழுக்காடாக உயர்ந்துள்ளது.