டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 94 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எல்லை பாதுகாப்பு படையில் இதுவரை 195 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இதுவரை 161 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தோ -திபத்திய எல்லை பாதுகாப்புபடையில் 82 பேருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 32 பேருக்கும் கொரோனா உறுதியாகி இருக்கிறது. மத்திய தொழில் பாதுகாப்புபடையில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்தார். (Getty Images)