முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

  • 16

    தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னையில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு குறைந்து காணப்பட்ட நிலையில், மூன்று நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணிநேரத்தில் 1187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனாவால் மேலும் 85 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9233-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 5612 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 448-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் 46336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 46

    தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

    மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 92166 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஒரே நாளில் 656 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சேலத்தில் 296 பேருக்கும், திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 34 ஆயிரத்தை கடந்தது.

    MORE
    GALLERIES

  • 66

    தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று

    விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் தலா 100-க்கும் மேல் தொற்று பதிவாகியுள்ளது. திருப்பூரில் 188 பேருக்கும், தஞ்சாவூரில் 179 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES