உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.7 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 1.36 கோடிபேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழரை லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53,60,000-ஆக உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 1,379 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் பாதிப்பு 31,70,000-ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000-ஐ தாண்டியுள்ளது.