உலகம் முழுவதும் கொரோனாவால் 2.35கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 4,200க்கும் மேற்பட்டோர் இறந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,12,000-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 58,74,000 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 36,00,000 பேருக்கும் ரஷ்யாவில் 9,56,000 பேரும் தென் ஆப்பிரிக்காவில் 6,9,000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.