முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 82.50 சதவீதத்தை கடந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து 16-வது நாளாக உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கிறது.

  • 17

    தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

    தமிழக கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒரே நாளில் புதிதாக 5,890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த பாதிப்பு 3,43,945ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

    சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் தொடர்ந்து நான்காவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் புதிதாக 1,185 பேர் உள்பட இதுவரை 1,17,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 37

    தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

    சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் ஒரே நாளில் புதிதாக 4,705 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக கோவையில் ஒரே நாளில் 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

    தமிழகத்தில் இனியும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டுக்கொண்டே தான் வரும் எனக் கூறியுள்ள மருத்துவர் ரம்யா, தொற்று அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படுவது, மக்கள் கையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 57

    தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

    சென்னையில் 24 பேர் உட்பட 31 மாவட்டங்களில் மொத்தமாக ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,886-ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

    தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், குணமடைந்தோர் விகிதம் 82.50 சதவீதத்தை கடந்து, மொத்த எண்ணிக்கை 2,84,000ஐ நெருங்கியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து 16-வது நாளாக உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்திருப்பது கவலை அளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 77

    தமிழகத்தில் கொரோனா - டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம் இருந்தாலும் கவலை அளிக்கும் இந்த எண்ணிக்கை

    தமிழகத்தில் ஒரே நாளில் 65,643 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,47,582 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES