இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால், மொத்த பாதிப்பு 20,27,000மாக அதிகரித்துள்ளது. அதில் 13,78,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தொற்று பாதிப்பால் 41,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு 4,79,000 ஆகவும், உயிரிழப்பு 16,792 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் 1,96,000 பேரும், கர்நாடகாவில் 1,58,000 பேரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் 2,27,24,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.