இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 75,083 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 1053 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,62,664 ஆக அதிகரித்துள்ளது. 9,75,861 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 44,97, 868 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 88,935 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 6,53,25,779 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது..