சென்னை தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மண்டலங்களை தொடர்ந்து, அண்ணா நகர், கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது. சென்னை மண்டலங்களின் கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,300 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தேனாம்பேட்டை மண்டலத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 5,200-ஐ கடந்துள்ளது. கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5000-ஐ நெருங்குகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளதாகவும் 24,670 பேர் குணமடைந்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.