மதுரையில், ஆவின் துணை பொது மேலாளர் உள்ளிட்ட ஆறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், மதுரை ஆவின் தலைமை அலுவலகத்தின் துணை பொதுமேலாளர் வேலுச்சாமி உள்பட ஆறு ஊழியர்களுக்கு தொற்று பரவியுள்ளது. இதனிடையே பால் உற்பத்தி பாதிக்கப்படாத வகையில் ஆவின் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.