முகப்பு » புகைப்பட செய்தி » கோயம்புத்தூர் » கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

Coimbatore | கோவையில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல வண்ணங்களில்  ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் நடவடிக்கையினை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

  • 18

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    L மாநகரில் உள்ள மேம்பாலங்களின் தூண்களில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், தனியார் நிறுவனங்களின் சுவரொட்டிகள்  ஓட்டப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை  தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும். பலனளிக்கவில்லை.

    MORE
    GALLERIES

  • 38

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    இந்நிலையில் மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 48

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    இந்நிலையில் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வண்ண ஓவியங்கள் வரைய திட்டமிட்டு, அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    முதல் கட்டமாக உப்பிலிபாளையம் மேம்பாலத்தின்  தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. வனவிலங்குகள், இயற்கை காட்சிகள், பறவைகள் உள்ளிட்ட பல வண்ணங்களில் இந்த ஓவியங்களானது  வரையப்பட்டு வருகிறது. தூண்களில் சினிமா போஸ்டர்களையே பார்த்து பழகிய பொதுமக்கள் , தூண்கள் வண்ணமயமாக காட்சியளிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 68

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    சென்னையில் இருந்து வந்துள்ள ஓவிய கலைஞர்கள்  உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் உள்ள தூண்களை வண்ணமயமாக  அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 78

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    விலங்குகள், இயற்கை காட்சிகளுடன் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், மன்னர்கள், கல்லணை விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு ஓவியங்களை வரைந்து வருவதாகவும், இதன் காரணமாக நகரம் அழகாக தெரிவதுடன்,  கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதும் தவிர்க்கபடுவதாகவும் ஓவியர்கள் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 88

    கோவையை அழகாக்கும் வண்ண ஓவியங்கள் - போஸ்டர் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

    இதே போல காந்திபுரம், லங்கா கார்னர் ,ரயில்நிலையம் உட்பட பல இடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES