தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் பயணிகள் தங்கிச் செல்வதற்காக நவீன குளிரூட்டப்பட்ட அறை திறக்கப்பட்டது.