தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே கூழாங்கல் ஆறு சலசலத்து ஓடும். இங்கே மழைக் காலத்தில் காட்டாற்று வெள்ளம் பெரும் சத்தத்தோடு பாயும். சீரான தண்ணீர் ஓடும்போது இதைப் பார்த்தாலே, ஆற்றில் கால்களைநனைத்து, குளிர்ந்த நீரில் விளையாட வேண்டும் என்ற ஆசை தோன்றும். அங்கே கண்ணாடி போல தெளிந்து இருக்கும் தண்ணீருக்குள் கூழாங்கற்கள் நிறைந்து காணப்படும்.