முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை » முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டுச் சுப நிகழ்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் சகோதரத்துவத்துடன் வந்து சீர்வரிசை செய்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • 17

    முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக வதந்தி பரவி பல குழப்பங்கள் உண்டாகிய நிலையில் கட்டிட நிறுவன உரிமையாளர் தனது வீட்டு சுப நிகழ்ச்சிக்குப் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்திருந்தார். புலம்பெயர் தொழிலாளர்களும் சகோதரத்துவத்துடன் கையில் சீர் வரிசையுடன் வந்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜாமணி-பத்மாவதி. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணியிடம் நிறைய வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது எப்போதுமே அன்பும் அக்கறையும் ராஜாமணிக்கு உண்டு.

    MORE
    GALLERIES

  • 37

    முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா, பூந்தமல்லி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு ராஜாமணி, தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர்களாக நினைத்து பத்திரிக்கை வைத்து, அழைப்பு விடுத்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    இந்நிலையில் அழைப்பை ஏற்றுக்கொண்ட 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், சீர்வரிசை தட்டுகளுடன் விழாவில் கலந்துக்கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 57

    முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    சகோதரத்துவ எண்ணத்தை வெளிகாட்டும் வகையில் சீர்வரிசையுடன் வந்து அசத்தினர். இது விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    MORE
    GALLERIES

  • 67

    முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    அதனைத் தொடர்ந்து அவர்களும் உறவினர்கள் செய்யும் அனைத்து சடங்குகளையும் செய்தனர். அதன் படி பெண்ணிற்கு அனைவரும் நலங்கு வைத்து அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 77

    முதலாளி மகளின் பூப்புனித விழாவிற்கு சீர் வரிசையோடு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    இந்த நிகழ்வு வந்தோர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமில்லாமல் மகிழ்ச்சியையும் உண்டாக்கியது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு அவர்களை நம்மில் ஒருவராய் காண்பதற்கும் தவறுவதில்லை என நிரூபிக்கும் வண்ணம் இந்த நிகழ்வு அமைந்தது.

    MORE
    GALLERIES