முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.206.5 பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.

  • 16

    எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற மத்திய வங்கி சுமார் 46 கோடி வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளது. தற்போது அதனின் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணக்கில் இருந்து ரூ.206.5 பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. தங்களின் அனுமதியின்றி பணம் பிடிக்கப்பட்டதால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

    ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் அவர்களின் ஆண்டுக் கணக்கை முடிக்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறவேண்டிய சேவை தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கின்றனர். அப்படி தற்போது பிடிக்கப்படும் ரூ.206.5 நாம் உபயோகிக்கும் கார்டுகளுக்கான பிடிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

    வங்கிகள் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த சேவையைப் பெறுவதற்கு அதற்கு ஏற்ற தொகையை நாம் செலுத்த வேண்டும். எஸ்.பி.ஐ வங்கியை பொருத்தவரை யூவா, கோல்டு, காம்போ, டெபிட் அல்லது ஏடிஎம் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

    இந்த கார்டுகள் பயன்படுத்துபவர்கள் அதற்கு ஏற்ற தொகையை அதற்குச் செலுத்தவேண்டும். அப்படி ஆண்டு தொகையாக கார்டுகளுக்கு ஏற்றவாறு ரூ. 147.5, ரூ.206.5 அல்லது ரூ. 295 செலுத்த வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

    ஏடிஎம் சேவையை உபயோகப்படுத்துவதற்கு ரூ.175 கட்டணமாக வங்கிகளுக்கு நாம் செலுத்த வேண்டும். அதில் ரூ.175 மற்றும் ஜிஎஸ்டி 18% ரூ.31.5 சேர்த்து மொத்தம் ரூ.206.5 செலுத்த வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 66

    எஸ்பிஐ வங்கியில் சத்தமில்லாமல் பிடிக்கப்படும் பணம்.. காரணம் இதுதான்!

    இந்த தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து வங்கிகளே பிடித்தம் செய்து கொள்ளுவார்கள். இந்த தொகையை நீங்கள் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். அப்போது தான் உங்களால் வங்கியில் கார்டு சேவையை உபயோகப்படுத்த முடியும்.

    MORE
    GALLERIES