நாட்டில் உள்ள பாதி வங்கிகள் ஆன்லைன் சேவையை வழங்குகிறது. ஆனால், அனைவரும் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. ஆன்லைன் சேவையை பயன்படுத்த தெரியாதவர்கள், எந்த வேலையாக இருந்தாலும் வங்கிக்கு சென்று தான் செய்வார்கள். ஆனால், இனி இவர்களும் வங்கிக்கு செல்லாமல், அவர்களின் வேலையை வீட்டிலிருந்தே முடிப்பதற்கான சில சேவைகளை செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.