மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஆசை என்றால் அது நிச்சயம் சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்பது தான்.. என்ன தான் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், குடிசையோ அல்லது மாளிகையோ ஏதாவது ஒன்று தமக்குரிய சொந்த வீடாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். இதுப்போன்றவர்களுக்காகவே பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரை கடன்களை வாரி வழங்குகின்றனர். இப்படி நீங்கள் புதிய வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தால், முதலில் இதை தெரிந்துக்கொள்வோம்..
வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…. சிபில் ஸ்கோர் - வங்கிகள் முதல் பிற கடன் வழங்கும் எந்தவொரு நிதி நிறுவனங்களாக இருந்தாலும் கடன் கொடுப்பதற்கு முன்னதாக உங்களின் சிபில் ஸ்கோரை சரிபார்ப்பார்கள். எனவே நீங்கள் வேறு எங்கும் கடன் வாங்கியிருந்தாலும் உங்களது கடனை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் கிரிடீட் அல்லது சிபில் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படும். எனவே எப்போதும் அதை கவனித்துக்கொள்ளவும்.
வட்டி வகை : வீட்டுக்கடன் பெறுவதற்கு முன்னதாக நீங்கள் எந்த வட்டி வகையில் கடன் பெற போகிறீர்கள்? என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும். அதாவது நிலையான, ஃப்ளோட்டிங் அல்லது கலப்பு வீத வீட்டுக் கடனா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் போது மாதந்தோறும் நீங்கள் கட்டக்கூடிய இஎம்ஐ தொகை எவ்வளவு வரும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ள முடியும்.அதாவது நிலையான விகிதக் கடனில், வீட்டுக் கடன் வாங்கும் போது வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. மறுபுறம், ஃப்ளோட்டிங் வீதம் அல்லது அனுசரிப்பு வீதம் வீட்டுக் கடன்கள் கடனளிப்பவரின் பெஞ்ச்மார்க் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கலப்பு வட்டி விகிதம் என்பது ஒரு நிலையான விகிதத்திற்கு ஒரு கால அளவு முடிவு செய்யப்பட்டு பின்னர் ஃப்ளோட்டிங் விகிதம் பயன்படுத்தப்படும்.
செயலாக்கக் கட்டணம் : நீங்கள் வாங்கும் வீட்டுக்கடனுக்கு ஏதேனும் செயலாக்கக் கட்டணம் உள்ளதா? எனச் சரிபார்க்கவும். வங்கிகள் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை செயலாக்கக் கட்டணமாக அல்லது குறைந்தபட்சத் தொகையை கட்டணமாக நிர்ணயிக்க கூடும். ஆவணங்கள் மற்றும் சட்டக் கட்டணம் உட்பட கடன் தொடர்பான பிற கட்டணங்கள் இருக்கலாம். எனவே நீங்கள் கடன் வாங்கவிருக்கும் நபர்களுடன் இந்த விவரங்களை முழுமையாகச் சரிபார்ப்பது நல்லது.