முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் முடங்கும்.. ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் முடங்கும்.. ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!

Post office : ஆதார் எண் சமர்ப்பிக்கப்படாவிட்டால், உங்கள் சிறுசேமிப்பு முதலீடுகள் முடக்கப்படும். ஏனெனில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண்ணை நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

  • 15

    அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் முடங்கும்.. ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!

    பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப் ), தேசிய சேமிப்பு சான்றிதழ் ( என்எஸ்சி ), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) அல்லது பிற அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு உள்ளதா ?

    MORE
    GALLERIES

  • 25

    அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் முடங்கும்.. ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!

    ஆம் எனில், செப்டம்பர் 30, 2023க்குள் உங்கள் ஆதார் எண்ணை அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது உங்கள் வங்கிக் கிளையிலோ சமர்ப்பித்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும் .

    MORE
    GALLERIES

  • 35

    அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் முடங்கும்.. ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!


    இந்த தேதிக்குள் ஆதார் எண் சமர்ப்பிக்கப்படாவிட்டால், உங்கள் சிறுசேமிப்பு முதலீடுகள் முடக்கப்படும். ஏனெனில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண்ணை நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. தற்போதுள்ள சிறுசேமிப்பு திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஆணை கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 45

    அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் முடங்கும்.. ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!

    அறிவிப்பின்படி, " டெபாசிட் செய்பவர் ஏற்கனவே கணக்கைத் தொடங்கி, கணக்கு அலுவலகத்தில் தனது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர் 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆறு மாத காலத்திற்குள் அதைச் செய்ய வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 55

    அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் முடங்கும்.. ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!

    அதாவது, " செப்டம்பர் 30, 2023க்குள் செய்து முடிக்க வேண்டும். அதன்படி, சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பான் மற்றும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது.
    ஆறு மாதங்களுக்குள், அதாவது செப்டம்பர் 30, 2023க்குள், ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் சமர்ப்பிக்காவிட்டால், சிறுசேமிப்பு முதலீடு முடக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES