இந்தியாவில் நாம் பயன்படுத்தும் வாகனங்களை காப்பீடு செய்வது சட்டப்படி கட்டாயம். காப்பீடு செய்து கொள்ளாமலோ, செல்லத்தக்க காப்பீட்டு சான்றிதழ் வைத்துக்கொள்ளாமலோ வாகனத்தை சாலையில் இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் வாகனங்களை நாம் மறக்காமல் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அப்படி காப்பீடு செய்வதில் நமக்கு சாதகமாக பல அம்சங்கள் இருக்கின்றன.
அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளெய்ம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும். அவ்வாறு விபத்து கிளெய்ம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகி No Claim Bonus Certificate வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள் .
அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக் கொள்ளலாம். அது உங்கள் உரிமை .உங்களுடைய பழைய காரை வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது, உங்கள் நோ கிளெய்ம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது.