கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், 2020 ஆம் ஆண்டில் மத்திய வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இவை நிறம், அளவு மற்றும் தீம் ஆகியவற்றின் அடிப்படையில் பழைய நோட்டில் இருந்து வேறுபட்டன. தற்போது, நாட்டில் மீண்டும் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. உங்கள் கையில் இருக்கும் அல்லது கடைகளில் வாங்கும் 500 ரூபாய் நோட்டு நல்ல நோட்டா? அல்லது போலியானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என இங்கே காணலாம்.
மத்திய அரசு புதிதாக வெளியிட்ட 500 ரூபாய் நோட்டு பழைய நோட்டை விட முற்றிலும் வித்தியாசமானது. இந்த நோட்டில் பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்த இடமும் பழைய நோட்டில் இருந்து வித்தியாசமாக இருந்தது. அசல் 500 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் மொத்தம் 17 அடையாளங்கள் உள்ளன. அவற்றை பற்றி காணலாம்.
அசல் நோட்டின் முதல் அடையாளம் என்னவென்றால், வெளிப்படையான முறையில் எண்களில் எழுதப்பட்ட 500 ஆகும். இதையடுத்து, கீழே ஒரு வட்டவடிவமான ரகசிய படம் உள்ளது. அதிலும், 500 என்று எழுதப்பட்டுள்ளது. மூன்றாவதாக தேவநாகரியிலும் (Devanagari) 500 எழுதப்பட்டிருக்கும். நான்காவது அடையாளம், நோட்டின் நடுவில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும்.
ஏழாவது அடையாளம் மகாத்மா காந்தியின் படத்தின் வலதுபுறத்தில் கவர்னரின் கையொப்பத்துடன் கூடிய உத்தரவாத வாக்கியம் மற்றும் RBI குறி இருக்கும். 8-வது அடையாளம் : மகாத்மா காந்தியின் படம் மற்றும் 500 என்ற வாட்டர்மார்க் காலியிடத்தில் மறைக்கப்பட்டிருக்கும். 9-வது அடையாளம், நோட்டின் கீழ் வலது பக்கத்தில் ஏறுவரிசையில் இருக்கும் எண்கள். 10-வது அடையாளம் ரூ. 500 (பச்சை முதல் நீலம் வரை) கீழ் வலதுபுறத்தில் வண்ணத்தை மாற்றும் மையில் எழுதப்பட்டுள்ளது.