அப்படி பணத்தை நாம் திருப்பி அனுப்பும்பட்சத்தில் நமது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக யாரேனும் அலைபேசியில் தொடர்புகொண்டால், உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக பெற்றுக்கொள்ளுமாறு கூற வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
உங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப மட்டுமே UPI பின்னை பதிவிட வேண்டும். மற்றொருவரிடம் இருந்து பணத்தை பெற UPI பின்னை பதிவிட வேண்டியதில்லை
யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்பவும். பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது
UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை வேறு யாருடனும் பகிர கூடாது
UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை
தெரியாத அல்லது அறிமுகம் இல்லாத நபர் கேட்கும்போது நம்முடைய UPI ஐ ஷேர் செய்வது அல்லது தேவையற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு நமது போனுக்கு எதாவது sms வந்தால் அதனை தவிர்க்க வேண்டும்