முகப்பு » புகைப்பட செய்தி » business » புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

Pondicherry News : புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா 2023 மற்றும் 33வது மலர், காய், கன கண்காட்சி, முதலியார்பேட்டை AFT மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக  நடைபெற்று வருகிறது

  • 110

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா 2023 மற்றும் 33வது மலர், காய் மற்றும் கனிக் காட்சி, முதலியார்பேட்டை AFT மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 210

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    இதனை துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    MORE
    GALLERIES

  • 310

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    இந்த கண்காட்சியில் பூக்களால் ஆன டால்பின், சிட்டுக்குருவி, மைனா, மயில், பென்குயின், சிங்கம், பூக்களால் நீர் ஊற்று, யானை மற்றும் நவதானியங்களில் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆயி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 15,000 அலங்காரத்தழை மற்றும் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 410

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    மேலும் 35,000 எண்ணிக்கையில் அடங்கிய சால்வியா, சாமந்தி, சினியா, பெட்டுன்னியா, டொரேன்னியா, காலன்டுலா, டையான்தஸ் மற்றும் தாலியா போன்ற மலர்ச் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    MORE
    GALLERIES

  • 510

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    இதேபோல் மூலிகை செடிகள், செடிகளான பேய் விரட்டி, திப்பிலி, சோற்றுக் கற்றாழை, யானை திப்பிலி, பின்னை, மருதாணி, காட்டு துளசி, திருநீற்றுப் பச்சிலை, குட்டி பலா, கருஊமத்தை, காட்டு வெற்றிலை, தவசி கீரை, உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    MORE
    GALLERIES

  • 610

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    திராட்சையால் உருவாக்கப்பட்ட காளைமாடுகள், தர்பூசணியில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி, பாரதியார், அப்துல் கலாம், அன்னை தெரசா, நரேந்திர மோடி, மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் உருவங்களும் தர்ப்பூசணியால் உருவாக்கப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 710

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    மேலும் அண்ணாச்சி பழ முதலை, மாம்பழ மீன்கள், பூசணிக்காய் கத்தரிக்காய் மயில், பாகற்காய் டைனோசர் ஆகிவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    MORE
    GALLERIES

  • 810

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    மேலும் பார்வையாளர்கள் கண்காட்சியை ரசித்ததுடன் குடும்பத்தில் சுற்றுலாப் பயணிகள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    MORE
    GALLERIES

  • 910

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    3 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி வேளாண் துறை சார்பில் காய், கனி, மலர் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்துக்கு சுற்றுலா பயணிகள் வெகுவாக வருகை தந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1010

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர், காய்கனி கண்காட்சி!

    மேலும் பார்வையாளர்கள் கண்காட்சியை ரசித்ததுடன் சுற்றுலாப் பயணிகள், போட்டோ, எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    MORE
    GALLERIES