முகப்பு /செய்தி /பெரம்பலூர் / கள்ளக்காதல் விவகாரம்: கள்ளத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி- பெரம்பலூரில் பரபரப்பு

கள்ளக்காதல் விவகாரம்: கள்ளத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி- பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர் காவல்துறை

பெரம்பலூர் காவல்துறை

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் உரிமை பெறாத நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள நமையூர் கிராமம் நரிஓடை பகுதியைச் சேர்ந்தவர் அல்லித்துறை மகன் அஜித். அவருக்கு வயது 26. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இறந்து விட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஜினி(45) இவருக்கு ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரஜினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ள நிலையில் இந்த தகவல் அஜித்திற்கும் தெரிந்துள்ளது. தனது கள்ளக்காதல் தொடர்பாக குடியிருப்பு பகுதிகளில் தகவல் பரப்பியவர் அஜித் என்று நினைத்த, ரஜினி அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவருக்கும் நேற்று காலை முதல் தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள மறைவான பகுதிக்கு அஜித் சென்ற பொழுது அவரை பின்தொடர்ந்து சென்ற ரஜினி தன்னிடமிருந்த உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலையில் பலத்த குண்டு அடிபட்ட ரஜினி அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடியுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த, ரஜினி அருகில் யாரேனும் வந்தால் சுட்டு விடுவேன் என்று கூறிவிட்டு துப்பாக்கியுடன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அஜித்தை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி வந்த உறவினர்கள், மங்களமேடு காவல் நிலையம் அருகே வரும் பொழுது 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்த வந்த 108 வாகன ஊழியர்கள்  பரிசோதித்த பொழுது அஜீத் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய மங்களமேடு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அஜித்தின் தாயார் ராதா(60) கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த மங்களமேடு போலீசார் உரிமை பெறாத கள்ளத் துப்பாக்கி ரஜினிக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும், தப்பியோடிய  அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்தும், தனிப்படை அமைத்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு..!

மேலும் சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் உரிமம் பெறாத நாட்டுக்கு துப்பாக்கியால் வாலிபர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Perambalur