முகப்பு /செய்தி /பெரம்பலூர் / 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. பெரம்பலூரில் 97.59% பேர் தேர்ச்சி..!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. பெரம்பலூரில் 97.59% பேர் தேர்ச்சி..!

மாதிரி படம்

மாதிரி படம்

Perambalur district 12th Board Results 2023 | தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.

  • Last Updated :
  • Perambalur, India

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளின் படி  தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மாநில அளவில் அரசு பள்ளிகளில் 95.6 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தை பெரம்பலூர் மாவட்டம் பிடித்துள்ளது. இதில் 79 பள்ளிகளில் 3,906 மாணவர்கள் 3,749 மாணவிகள் என மொத்தமாக 7,655 மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதி இருந்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இந்த முடிவுகளை www.dge.tn.gov.in,  www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு செல்போனில், குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள - Tamil Nadu 12th Result 2023 Live 

மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது..

செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்

First published:

Tags: 12th exam, 12th Exam results, Exam results, Local News, Perambalur