முகப்பு /செய்தி /நீலகிரி / நீலகிரி சிங்காரா வனச் சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலி..!

நீலகிரி சிங்காரா வனச் சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலி..!

புலி

புலி

Nilgiris | முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனப்பகுதியில் பட்டப்பகலில் திடீரென தென்பட்ட புலி.. வியப்புடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்...

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனபகுதியில் சாலை ஓரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலியை சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கண்டு ரசித்தனர்..

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனால் வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. யானை , மான் , கரடி, காட்டெருமை ,புலி ,சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் சாலை ஓரங்களில் தென்படுகின்றன.

இதில் சிங்கார வனப்பகுதியில் சமீப நாட்களாக புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று சிங்காரம் கிராமத்துக்கு செல்லும் சாலையோர வனப்பகுதியில் பட்டப் பகலில் திடீரென புலி நடந்து சென்றது. இதை அப்பகுதி வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கண்டனர் .

Also see... Math problems | பாலத்தைக் கடக்கும் ரயிலின் காலத்தைப் பொறுத்து பாலத்தின் நீளத்தை சொல்ல முடியுமா?

புலி நடமாட்டம் காணப்படுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கவனமுடன் செல்லவும் வனப்பகுதிகளில் இறங்கி புகைப்படம் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

top videos

    செய்தியாளர் : அய்யாசாமி (நீலகிரி)

    First published:

    Tags: Ooty, Tiger