பண்டைய காலத்தில் விலங்குகளின் இடம் இருந்து தற்காத்துக் கொள்ள கம்புகளை பயன்படுத்தினர். காலப்போக்கில் தனியொரு கலையாக வடிவம் பெற்றது சிலம்பம். இந்த கலை தற்போது பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் பரவலாக பயிற்றுவிக்கபட்டு வருகிறது.
ஆயகலை 64-ல் சிலம்பமும் ஒன்று. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் சிலம்பம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ள. இத்தனை சிறப்புமிக்க சிலம்பம் கலையை பயில்வதில் தற்போதுள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், உதகையில் சிறு வயது முதலே பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி, உதகை அருகே உள்ள ஆர். கே. புரத்தில், பயிற்சியாளர் பார்த்திபன் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். உதகை ஆர்வமுள்ள மாணவர்கள் தொடர்புக்கு பயிற்சியாளர் பார்த்திபனை 9585406324 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ooty