உதகை அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் 34 மாணவர்களின் +2 தேர்வு முடிவில் கணித பாட மதிப்பெண் வழங்காமல் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருத்தி நல்ல முடிவெடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 27-ந்தேதி நடைபெற்ற +2 கணித பொதுத்தேர்வின் போது உதகை அருகே உள்ள சம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கண்காணிப்பாளர்கள் உதவியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நேற்றுமுன்தினம் வெளியான +2 தேர்வு முடிவில் அப்பள்ளியை சேர்ந்த 34 மாணவர்களுக்கு கணித பாடத்தின் மதிப்பெண் வழங்கபடாமல் தோல்வி அடைந்ததாக வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி தலைமையில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள 34 மாணவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் லதா, தற்போதைய தலைமை ஆசிரியர் ரகுநாதன் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேர்வு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் தனி தனியாக விசாரணை நடைபெற்றது.
மேலும் சர்ச்சைக்கு உரிய 2 மாணவர்களை தவிர மற்ற 32 மாணவர்களுக்கு கணித பாடத்தின் மதிப்பெண் வழங்குவது குறித்து தமிழக அரசு நல்ல முடிவெடுக்கும் என்று கூறிய அவர் எனவே அச்சபட தேவையில்லை என்றார்.
செய்தியாளர் : அய்யாசாமி ( ஊட்டி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Public exams