நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பணியாற்றி வரும், தோட்டக்கலை துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து 7வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊட்டியில் மழை பெய்துவரும் நிலையில், கொட்டும் மழையிலும் ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், வேண்டுகோளா இதனை முன்வைத்துள்ளனர். அவர்களது போராட்டத்தை எந்த அதிகாரிகளும் இதுவரை கண்டு கொள்ளவில்லை எனவும், அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அவர்களது கோரிக்கைக்கு பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பல்வேறு கோஷங்கள் மற்றும் முழக்கங்கள் எழுப்பியவாறு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris