முகப்பு /நீலகிரி /

மேலும் அழகாகும் ஊட்டி தாவரவியல் பூங்கா.. சீரமைப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரம்..

மேலும் அழகாகும் ஊட்டி தாவரவியல் பூங்கா.. சீரமைப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரம்..

X
ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் ஊழியர்கள்

மலா் கண்காட்சியை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மலைகளின் அரசியாக விளங்குகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனா்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சா்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஒவ்வொரு ஆண்டும் ஈர்த்து வருகிறது  இந்த பூங்காவில் மே 19ம் தேதி முதல் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவை அழகுப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது இறுதி கட்ட பணிகளாக குடில்கள் அமைப்பது, நுழைவு வாயில்களில் வர்ணம் பூசுவது, கலையரங்கங்கள் அமைப்பது, தொட்டிகளில் உள்ள பூக்களை பராமரிப்பது மற்றும் புல்வெளிகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் ஊழியர்கள்

இதையும் படிங்க : கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வரும் புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை தெரிவித்தால் அலுவலகத்தில் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nilgiris