உதகையில் பிரசித்த பெற்ற கோவிலான மாரியம்மன் கோவில் கடந்த மார்ச் மாதம் 17 - ஆம் தேதி காப்பு கட்டுடன் நிகழ்வுடன் தொடங்கியது . ஒரு மாதமாக நடைபெற்ற இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும், அம்மன் ஒவ்வொரு ரூபத்தில் அவதரித்து வீதி உலா வந்து மீண்டும் கோவிலை சென்றடைவது வழக்கம்.அந்த வகையில் தேர்பவனியின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தேரைக் வடம் பிடித்து இழுத்து வீதி உலா செல்லும் நிகழ்வு (18 4 2023) இன்று நடைபெற்றது .
காலை முதலே நடைபெற்ற சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகளில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். சாரியாக மதியம் 1.55 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் கலந்து கொண்டார். முன்னதாக தேர், பவனி வரும் முன் அம்மனை அலங்காரம் செய்து கோவிலை சுற்றி தோள் மீது தூக்கி சுமந்து சென்று பின்னர் தேரில் வைத்தனர்.
இரவு முழுவதும் நடைபெறும் இந்த தேர் பவனியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் நடைபெறும் சமயங்களில் சுற்றுலா நகரமான உதகை விழா கோலம் கொண்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris