நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்கும். இச்சமயங்களில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவர மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்படுகிறது. அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இந்த புகைப்பட கண்காட்சி மே 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் புகைப்பட கண்காட்சிக்கு டிக்கெட் கட்டணமாக ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தின், இயற்கை சூழல் ,இங்கு வாழும் வனவிலங்குகள், நீலகிரி பழங்குடி மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறை ,பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்களின் புகைப்படங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இக்கண்காட்சியில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கண்காட்சியில் இடம்பெறும் அனைத்து புகைப்படங்களுக்கும் நற்சான்றிதழ் மற்றும் சிறந்த 5 புகைப்படங்களுக்கு பரிசும், நற்சான்றிதலும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty