சீனாவில் அதிகரித்து வரும் BF 7 புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதையடுத்து அதிகரிக்க தொடங்கும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மாஸ்க் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்க, மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் இதுவரை BF 7 புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். தமிழகத்திலும் கொரோனா பரவல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பிஎஃப் 7 அதிகரித்து வரும் நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்த தடையும் விதிக்காமல் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து மதுரை வந்த சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹேமநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona safe, CoronaVirus, Local News, Virudhunagar