விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டி செல்வம் -ரூபா தம்பதி. ரூபா எட்டாக்காபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அதே பட்டாசு ஆலையில் சாத்தூர் படந்தாலை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். வேலை பார்க்கும் இடத்தில் ரூபாவுக்கும் கருப்பசாமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
பாண்டி செல்வத்தின் அம்மா வி.குமாரலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். பாதயாத்திரை செல்லும் அம்மாவை வழிஅனுப்பி வைப்பதற்காக நேற்று மாலை பாண்டி செல்வம் அவரது ஊருக்கு நேற்று மாலை சென்றுள்ளார். கணவன் வீட்டில் இல்லாத நிலையில் கள்ளக்காதலன் கருப்பசாமியை ரூபா வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஊருக்கு சென்ற பாண்டி செல்வம் நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருப்பதைக்கண்டு ஆத்திரமடைந்துள்ளார். கருப்பாசாமி கற்கள் மற்றும் கட்டையை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் சிவகாசி நகர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கருப்பசாமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பசாமியை கொலை செய்த பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை கணவர் கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: செந்தில்குமார் (சிவகாசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Local News, Sivakasi, Tamil News, Virudhunagar