விருதுநகர் மாவட்டம் தொட்டியபட்டி துணைமின் நிலையத்தில் நாளை (13-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின் தடை பகுதிகள்:
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், முத்துலிங்கபுரம், அழகாபுரி, தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இதுக்காது.
Must Read : இயற்கை எழில் கொஞ்சும் ஒகேனக்கல்.. குவிந்த சுற்றுலா பயணிகள்.. புகைப்படத் தொகுப்பு!
அதேபோல, கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ் காந்திநகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்ட மலை மற்றும் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar