முகப்பு /செய்தி /விருதுநகர் / விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி நகரம், பாறைப்பட்டி மற்றும் நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

அங்கே, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோவில், சிவகாசி பஸ் நிலையம், ஜக்கம்மாள் கோவில், நாரணாபுரம் ரோடு, காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்கடைமுக்கு, தபால் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், பராசக்தி காலனி, வடக்குரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

இதேபோல நாரணாபுரம், பள்ளப்பட்டி, விங்கபுரம்காலனி, ராஜிவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜபுரம் காலனி, 56 வீட்டுகாலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசாநகர், பர்மாகாலனி, போஸ்காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி மற்றும் மீனாட்சிநகர் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar