சிவகாசியில் ஒரே நாளில் இருவேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கனஞ்சம்பட்டியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 10 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
இதில், சத்திரப்பட்டி சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் தொழிலாளி உட்பட இருவர், இடிபாடுகளுக்குள் சிக்கி, உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், கருப்பசாமி, மாரீஸ்வரன், மாரிமுத்து, ராஜ்குமார் உள்ளிட்ட 7 தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வெடிவிபத்து குறித்து வெம்பகோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், வெடி விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, இன்று காலை செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து எற்பட்டது. பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, ரசாயன, மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஓர் அறை ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ரவி என்ற தொழிலாளி உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
செய்தியாளர்: M.செந்தில்குமார், சிவகாசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crackers, Fire accident, Local News, Sivakasi, Virudhunagar