ராஜபாளையம் அருகே விவசாயியின் வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் விவசாயியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதியினர் அவர்களது வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் நெல் சேகரித்து வைத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவரது குழந்தைகள் டிரம்மின் அருகில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது டிரம்மில் இருந்து ஒரு சத்தம் கேட்டது. உடனே அருகே சென்று பார்த்தபோது டிரம் மூடியின் மேல் பகுதியில் வால் போன்று லேசாக தெரிந்தது.
இதையடுத்து ஜோதி மணி டிரம்மை திறந்து பார்த்த போது நெல்மணிக்குள் பாம்பு பதுங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை கண்ட குழந்தைகளும் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக மீட்டு மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் விடுவித்தனர்.
செய்தியாளர்: M.செந்தில்குமார், சிவகாசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Rajapalayam Constituency, Snake, Virudhunagar