விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்து 50 நாட்களே ஆன பெண் கைக்குழந்தை உடன் தாய் கிண்ணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்எடையாளம் ஊராட்சிக்குட்பட்ட கடக்கால்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த லாலுபாஷா-ஜன்மா தம்பதிகளின் மகள் பிர்தோஸ்( வயது 21). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த அன்வனர் பாஷா என்பவரின் மகன் அப்துல்லா(25) என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் 50 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய தாய் வீடான கடக்கால்தோப்பு கிராமத்தில் பிர்தோஸ் தங்கி வந்துள்ளார். இதனிடையே நேற்று காலை குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பழமையான விவசாய கிணற்றில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை ஹயானா சடலமாக மிதப்பதைக் கண்ட கிராம பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவருடைய தாய் பிர்தோஸ் எங்கு தேடியும் காணாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து செஞ்சி தீயணைப்புத்துறையினருக்கும், செஞ்சி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த செஞ்சி தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு தாய் பிர்தோஸ் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனர். இதுகுறித்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம் பெண் பிறந்து 50 நாட்களில் ஆன தன்னுடைய பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வேற ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட பிர்தோஸ் தாய் ஜன்மா செஞ்சி காவல் நிலையத்தில் வரதட்சணை பிரச்சனை என புகார் அளித்தார்.
இதனை அடுத்த செஞ்சி போலீசார் அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வரதட்சணை பிரச்சனையில் திருமணமான ஒரு வருடத்துக்குள்ளாகவே இளம் பெண் பிறந்து 50 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி ( விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Villupuram