முகப்பு /செய்தி /விழுப்புரம் / விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருப்பது கடத்தல் அரிசியா? அதிகாரிகள் தீவிர சோதனை

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருப்பது கடத்தல் அரிசியா? அதிகாரிகள் தீவிர சோதனை

அன்பு ஜோதி ஆசிரமத்தில் மீண்டும் சோதனை

அன்பு ஜோதி ஆசிரமத்தில் மீண்டும் சோதனை

Villupuram Anbu Jothi Ashram | ஆசிரமத்தில் ரேஷன் அரிசி பொதுமக்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதா அல்லது கடத்தப்பட்ட அரிசியா என விசாரணை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி மனோகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 600 கிலோ ரேஷன் அரிசி  உள்ளது குறித்து  ஆய்வு செய்தனர்.

 

விழுப்புரம் அடுத்த குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய வழக்கில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் என 9 பேர் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.  மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டு சிபிசிஐடி, எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பி, 4 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் விசாரணை  செய்து வருகின்றனர்.

சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.  இந்நிலையில் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி மனோகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 600 கிலோ ரேஷன் அரிசி  உள்ளது குறித்து  ஆய்வு செய்தனர்.

ஆசிரமத்தில் ரேஷன் அரிசி பொதுமக்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதா அல்லது ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்பவர்களிடமிருந்து பெறபட்டதா என்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வாங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை ஆய்வு செய்து சென்றனர். தற்போது சிபிசிஐடி போலீசாரிடம் இவ்வழக்கு உள்ளதால் இவ்விசாரணைக்கு பின்னரே ரேஷன் அரிசி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி மனோகர் தெரிவித்தார்.

செய்தியாளர் : குணநிதி

First published:

Tags: Crime News, Local News, Villupuram