விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9 பேரை கைதுசெய்தனர்.
ஆசிரமத்தில் தங்கி இருந்த 140க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 16 பேர் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், காவல் துறையினரால் மீட்கப்பட்டவர்களில் தங்களின் உறவினர்கள் இல்லை என அறிந்து அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள் சிலர் கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
லட்சுமி அம்மாள், முத்து விநாயகம், பத்மா, நடராஜன், மற்றும் காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேரை காணவில்லை எனக்கூறி அவர்களது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தற்போது இது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Villupuram