முகப்பு /செய்தி /விழுப்புரம் / விழுப்புரம் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

Villupuram distric | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சில இடங்கிளல் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. எனவே, மாவட்டத்தின் சில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது.

இவ்வாறு, பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மாவட்டத்தின் சில பகுதிகளில் உயர் அழுத்த மின் கம்பங்கள் சாய்ந்தும், மின் கம்பிகள் அறுந்தும் விழுந்தன.

இதனிடையே விழுப்புரம் மாவட்டதில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியில் 117 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வழியாக வரும் தென்பெண்ணை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் வினாடிக்கு நேற்று காலை வினாடிக்கு 13,900 கனஅடி நீர் சென்ற நிலையில், மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

இதேபோல, தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்டி மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, விழுப்புரம் அருகே பில்லூர்-சேர்ந்தனூர், எஸ்.மேட்டுப்பாளையம்-பரசுரெட்டிப்பாளையம் மற்றும் திருக்கோவிலூர்-அரகண்டநல்லூர் இடையே உள்ள தரைப்பாலங்கள் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Flood, Local News, Villupuram